LatestNews
தமிழகத்தில் தினசரி பால் கொள்முதல் உயர்வு
தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் 40 லட்சம் லிட்டராக உயர்வு
ஆவின் மேலாண்மை இயக்குநர் தகவல்
தமிழகத்தில் கொரோனா காலக்கட்டத்திலும், 25 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திலும் தினசரி பால் கொள்முதலானது 34.50 லட்சம் லிட்டரிலிருந்து 40 லட்சமாக உயர்ந்துள்ளது என, தமிழக பால்வளத்துறை நிர்வாக இயக்குநர் வள்ளலார் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா காலத்தில் தனியார் துறைகள் விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்வதை திடீரென குறைத்தபடியால், விவசாயிகள் அவதியடைந்தனர்.
இதனால், ஆவின் நிர்வாகமானது, விவசாயிகளின் கஷ்டத்தை போக்கும் வகையில், விவசாயிகளிடமிருந்து பாலை கூடுதலாக கொள்முதல் செய்ய நேரிட்டது.
மேலும், இந்த இக்கட்டன காலக் கட்டத்திலும், ஆவின் நிர்வாகமானது பொது மக்களுக்கு உரிய நேரத்தில் சப்ளை செய்தது.
மேலும், பால் உற்பத்தியாளர்களின் துயரை துடைக்கும் வகையில் உரிய கொள்முதல் விலையானது வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உரிய நேரத்தில் மாட்டுத் தீவணம், உரியவிலை, பசுமாடுகளுக்கு காப்பீட்டுத் திட்டம் மற்றும் கால்நடைகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு காலத்திலும், சென்னையை பொறுத்த மட்டில் கடந்த நான்கு மாதங்களில் 11.50 லட்சம் லிட்டரிலிருந்து, 13.50 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.
இனையதளம் மூலமாக வீடுகளுக்கு சென்று ஆவின் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆவின் நிர்வாகத்தில் நீண்ட காலமாக வழங்கப்படாமல் இருந்த பணியாளர்கள் பதவி உயர்வானது, பணி மூப்பு அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதால் நிர்வாக பணிகள் முடுக்கி விடப்பட்டு, துரிதமாக நிர்வாகம் செயல்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
LatestNews
விழா நடத்த கோரிக்கை

விழா நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மனு:
மதுரையில் ஆலய திருவிழாவை நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மாவட்டத் தலைவர் அழகர்சாமி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனு அளித்தனர்.
LatestNews
கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் டீக் க டைக்காரர்…

திருப்பரங்குன்றம் அருகே கொரான இரண்டாவது அலைக்காக சோளங்குருணி கிராமத்தில் போராடும் தனி ஒருவர்:
மதுரை
முக கவசம், கப சுரக்குடி நீர் வழங்கி வரும் தன்னார்வலர்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங்குருணி கிராமத்தில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 54) இவர் டீக்கடை தொழில் நடத்தி வருகிறார்.
தற்போது வேகமாக பரவிவரும் கொரானா தொற்று இரண்டாவது பரவலை தடுக்கும். விதமாக தன்னார்வலராக ரவிச்சந்திரன் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
சோளங்குருணி கிராமத்தில் மட்டுமல்லாமல் சுற்றுப்புறங்களில் செல்லும் பேருந்துகளில் ஏறி பொதுமக்கள் அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் கப சுர குடிநீர் வழங்கி தன்னார்வலராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
ரவிசந்திரன் ஏற்கனவே கடந்த வருடம் கொரான தொடருக்கு தனது மாருதி ஆம்னி வேனில் ஸ்பீக்கர் மைக்செட் மூலம் விழிப்புணர்வு செய்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக திருமங்கலம் காவல் உதவி கண்காணிப்பாளர் (டிஎஸ்பி ) வினோதினியிடம் பாராட்டு சான்றிதழ் , மற்றும் கேடயம் பரிசு பெற்றவர் என்பது பாராட்டுக்குரிய விஷயம்.
LatestNews
12 April, 2021 14:05

*மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்க கோரி பொதுமக்கள் போராட்டம்.!
மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும்,கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விழாவானது பக்தர்கள் அனுமதியின்றி ஆகமவிதிப்படி நடத்தப்பட்டது, இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்தநிலையில் கோவில்களில் வழிபட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் இந்த ஆண்டு நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவினை பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சித்திரை திருவிழா எப்போதும் போல பக்தர்கள் அனுமதியோடு நடத்தகோரியும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்,இதில் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிவருகின்றனர், போராட்டத்தால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர், கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு காரணத்தால் காவல்துறையினர் அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்ய இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டுகட்டாக கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.