புதிய வழித்தடங்களில் அரசு பஸ்: அமைச்சர்.
மதுரை:
மதுரை மாவட்டம், கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆணையூர் பேருந்து நிலையத்தில் இன்று(10.04.2022) போக்குவரத்து துறை, மதுரை மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 15 புதிய வழித்தடங்களில் அரசு பேருந்துகளின் செயல்பாடுகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், திமுக ஒன்றியச் செயலாளர் சி. சிறைச் செல்வன் ஆகியோர் உடன் உள்ளனர்.