கூட்டுறவு ஊழியர் சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்:
மதுரை:
நியாயவிலைக் கடை கூட்டுறவு ஊழியர்களைத் துன்புறுத்தே எனக் கூறியும், அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி வழங்கவேண்டும், தரமற்ற பொருட்களை விநியோகிக்க ரேசன் கடை விற்பனையாளர்கள் வற்புறுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மதுரை அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகே தமிழக கூட்டுறவு சங்க ஊழியர் சங்கம், மதுரை மாநகர் மதுரை புறநகர் மாவட்ட கூட்டுறவு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில், பங்கேற்ற சிஐடி யூ மாவட்ட செயலர் ஆர் தெய்வராஜ், சிஐடியூ நகர் கூட்டுறவு ஊழியர் சங்க செயலர் லெனின் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.