சோழவந்தான் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள் தேர்தல் அதிகாரி முன்பு பதவியேற்றுக் கொண்டனர்
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சோழவந்தான் பேரூராட்சியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் 6 பேரும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் தேர்தல் அதிகாரி முன்பு பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு சோழவந்தான் பேரூராட்சி தேர்தல் அலுவலர் பதவி பிரமாணம் செய்து வைத்தார் பதவியேற்ற கவுன்சிலருக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் கழகத்தினர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்