சோழவந்தான் உழவன் உணவகத்தில் இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டம்:
சோழவந்தான்: ஜனவரி, 26:
மதுரை மாவட்டம் சோழவந்தான் உழவன் உணவகத்தில், இந்திய குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. முள்ளிப்பள்ளம் ஊராட்சி முன்னாள் தலைவர் மார் நாட்டான் தலைமை வகித்தார். உழவன் உணவகம் அமைப்பாளர் போதுமணி முன்னிலை வகித்தார். பேராசிரியர் பழனிச்சாமி கொடியேற்றினார் .
ஐக்கிய விவசாய சங்க மாநிலச் செயலாளர் சேது இனிப்புகள் வழங்கினார்.
இதில், காங்கிரஸ் பிரமுகர்கள் பழனி, பரமசிவம், முத்துப்பாண்டி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.