மதுரையில், மாரிதாஸ் மீது போடப்பட்ட வழக்கு ரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி:
மதுரை:
சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பதிவு வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட
‘யூ டியூபர்" ’ மாரிதாஸ் மீது மதுரை மாநகர் காவல் துறையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ,ரத்து செய்து உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு பிறபித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, மதுரை கடச்சனேந்தலில் வீட்டில் இருந்த மாரிதாஸை, மதுரை அண்ணாநகர் உதவி ஆணையாளர் சூரக்குமார் தலைமையில் போலீஸார் கைது செய்தனர்.