மதுரையில் மெஸ் உரிமையாளர் கொடூரமாக வெட்டி படுகொலை –
மதுரை:
மதுரை கோ புதூரில் .ஐ.டி.ஐ.க்கு எதிராக மெஸ் நடத்தி வந்தவர் மர்ம கும்பலால் வெட்டி படு கொலை செய்யப்பட்டார்.
மதுரை கோ.புதூர் பகுதியில் முத்துக்குமார் என்பவர் தனக்கு சொந்தமான மெஸ் வளாகத்திற்குள் மர்ம நபரால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகள் முத்துக்குமாரின் இடதுகையை வெட்டி எடுத்துச் சென்றதாக சம்பவ இடத்தில் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து கோ.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.